ADD THE SLIDER CODE HERE

Pages

Thursday, April 26, 2012

எனதருமை டால்ஸ்டாய்

"மனிதர்களின் நலன்சார்ந்த தொடர்பில்லாத எவ்விதமான விஞ்ஞானமும், கலையும் போலிகள் அன்றி வேறில்லை. புதிய புதிய கொலை ஆயுதங்களைக் கண்டுபிடிப்பவர்கள், புதிய பயங்கர வெடிகுண்டுகளால் நாசம் செய்பவர்கள் போல் ஆபாசமாக இசை, நாடகங்கள், நாவல்கள், கவிதைகள் எழுதும் இலக்கியவாதிகள் எல்லோரும் போலிகள். சமுதாயத்தின் விஷவிதைகள் நோய்கிருமிகள்" - இவை உலக புகழ் பெற்ற ரஷ்யா எழுத்தாளர் Leo Tolstoy ன் வரிகள்.

மு.கு: இந்த பதிவில் நான் எழுதிய அனைத்தும் திரு எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது. அந்த நூலின் தலைப்புதான் இந்த பதிவுக்கும்.


ஒரு திரைப்படம் உருவாகும் பின்னணி பற்றி தெரிந்து கொள்ள எனக்கு எப்போதுமே ஆர்வம் இருக்கிறது. ஆனால் புத்தகங்கள், நாவல், கவிதை நூல் உருவாகும் காரணம் பற்றி அறிய இதுவரை முயற்சிததில்லை. எதேர்ச்சையாக புத்துயிர்ப்பு(Resurrection) என்ற நாவல் பிறந்த காரணம் பற்றி தெரிய வந்த போது மிக மிக ஆச்சர்யம் அடைந்தேன். உலகில் இதுவரை வெளியான எந்த நாவலுக்கும் இல்லாத பின்புலம் இந்த நாவல் பெற்றிருக்கிறது என அடித்து சொல்லலாம். ஏனெனில் ஒரு இனத்தின் விடுதலைக்காக எழுதபட்ட நாவல் இது. அந்த இனத்தை சேர்ந்த 47000 மக்களின் வாழ்க்கை புத்துயிர்ப்பு எழுதிய டால்ஸ்டாய்யின் கைகளில் இருந்தது. யார் அந்த மக்கள்? என்ன பிரச்சனை அவர்கள் சந்தித்தார்கள்? டால்ஸ்டாய் அவர்களுக்கு செய்தது என்ன? பார்ப்போம்.

Doukhobors இன மக்கள்:

டுகொபார்ஸ் என்பது ரஷ்யாவில் இருந்த ஒரு மத பிரிவு. அவர்களின் வாழ்க்கை முறை மிகவும் சிறப்பானதாக இருந்திருக்கிறது. காந்தியடிகள் கூட அவர்களின் வாழ்வியலை பின்பற்றினார் என்று சொல்லபடுகிறது. அதை சேர்ந்த மக்கள் எத்தகைய ஒரு வாழ்க்கை வாழ்ந்தார்கள் என்று கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
  • சைவ உணவு மட்டுமே உண்பார்கள். பால் அருந்துவது கூட பாவம். அது கன்றுகளுக்கு உரியது என தவிர்த்துவிட்டனர்.
  • ஆண் பெண் யாராக இருந்தாலும் அவர்களால் முடிந்த வேலையை செய்தே ஆகவேண்டும். வயதானவர்களை ஊர் பராமரிக்கும்.
  • தங்களை யார் தாக்கினாலும், எவ்வளவு வன்முறை செய்தாலும் திருப்பி அடிக்க மாட்டார்கள். அகிம்சை தான் அவர்களை பொறுத்தவரை தெய்வம்.
  • புகையிலை, மது பழக்கம் கிடையாது. உணவை விற்பது பாவம்.
  • அடிப்படை வசதிகளுக்கு மேல் உணவோ, உடைமையோ வைத்துகொள்ள மாட்டார்கள். பணத்தின் மேல் பற்று கிடையாது.
  • மிக முக்கியம். அவர்கள் ராணுவ சேவையை வெறுத்தார்கள்.

மேல கூறியவற்றில் கடைசி வரிதான் அவர்களை சோதித்தது. கம்யூனிஸ்ட்களுக்கு முன்பு ரஷ்யாவை ஆண்ட ஜாரின் கொடுங்கோல் ஆட்சி, டுகொபார்ஸ் மக்களை கட்டாய ராணுவ பணி செய்ய உத்தரவிட்டது. கருணை மிக்க அந்த மக்களிடம் ஆயுதம் எடுத்து, கொலை செய்ய சொன்னால் கேட்பார்களா. மறுத்துவிட்டார்கள். அரசு கொதித்தது. ராணுவ பணி செய்ய மறுத்தவர்களை சிறையில் தள்ளியது. சைபீரிய சிறையில் நிரப்பி கொடுமைபடுத்தபட்டனர். அவர்கள் மனம் தளரவில்லை. எந்த நேரத்திலும் திருப்பி தாக்காமல் அமைதியுடன் ஏற்று கொண்டனர். இங்கு தான் டால்ஸ்டாய் எனும் மீட்பர் இவர்களுக்கு கரம் கொடுக்கிறார்.


டால்ஸ்டாய் செய்தது என்ன:

டுகொபார்ஸ் மக்களின் இந்த நிலையை பற்றி கேள்வி பட்ட டால்ஸ்டாய் அவர்களுக்கு ஆதரவாக பேச துவங்கினார். உலக நாடுகளின் கவனத்திற்கும், பத்திரிகைகளின் கண்களுக்கும் இந்த பிரச்னையை கொண்டு சென்றார். அரசு இறங்கி வந்து 47000 டுகொபார்ஸ் மக்களையும் நாட்டை விட்டு விரட்ட முடிவு செய்தது. கனடா அவர்களை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது . ஆனால் ரஷ்யாவில் இருந்து கனடாவிற்கு கடல் வழி பயணம் செய்ய ஆறாயிரம் மைல் பயணம் செய்ய வேண்டும். அதற்கான செலவை ரஷ்யா தராது என்று சொல்லிவிட்டது. அதனால் டால்ஸ்டாய் தன் நாவல் மூலம் கிடைக்கும் வருவாய் எல்லாம் இந்த மக்களின் பயணத்திற்கு செலவிட முடிவு செய்தார். அப்படி அவர் எழுதிய நாவல் தான் புத்துயிர்ப்பு. ஒரு பத்திரிக்கையில் தொடராக இந்த நாவலை எழுதினார். இதன் ராயல்டி தொகை எல்லாமே டுகொபார்ஸ் மக்களுக்கு கொடுக்கபட்டது. முதலில் கிடைத்த ராயல்டி தொகையை வைத்து 2300 அகதிகள் கப்பல் மூலம் கனடா அனுப்பபட்டனர். ஒரு நாளைக்கு பத்து மணிநேரம் உணவு உறக்கம் எல்லாம் மறந்து எழுதி இருக்கிறார். இதை எழுதும் பொது இவருக்கு வயது 78 என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இடையில் இவர் உடல் நலம் குறைந்து அவதி பட்டாலும் எழுதுவதை நிறுத்தவில்லை. ஒரு தேவதூதன் போல் தங்களை காக்க வந்த இவரின் உடல் நலம் பெற டுகொபர்ஸ் மக்கள் இறைவனை வேண்டினர். ஒரு வருடம் கழித்து நாவல் முடிவுற்றது. மக்கள் கனடா போய் சேர்ந்தனர்.

டால்ஸ்டாய் தன் ஆயுள் முழுதும் சக மனிதனை எவ்வாறு நேசிக்க வேண்டும் என கூறியே வாழ்ந்துவந்திருகிறார். அவரது சிறுகதை தொகுப்பு ஒன்றை படித்தேன். அருமை. அவரது 'போரும் அமைதியும்' நூல் இன்று வரை உலகின் சிறந்த நாவலாக கருதபடுகிறது.


The Last Station:

இந்த புத்தகம் படித்து முடித்த உடனேயே டால்ஸ்டாய் பற்றிய படம் ஒன்று வந்ததை தெரிந்து கொண்டேன். The Last Station என்ற அந்த படம் 2009 ம் ஆண்டு வெளிவந்துள்ளது. பேராசை கொண்ட தன் மனைவியால் டால்ஸ்டாய்யின் கடைசி நாட்கள் எவ்வளவு வேதனையாக இருந்தது என்று இந்த படம் கூறுகிறது. தனது படைப்புகள் அனைத்தும் தான் இறந்த பின் மக்களுக்கு பயன்பட வேண்டும் என நினைக்கும் டால்ஸ்டாய் அதன் காப்புரிமையை அரசுக்கு அளிக்க முடிவெடுக்கிறார். ஆனால் அந்த காப்புரிமை தனக்கே வேண்டும் என்றும், அதன் மூலம் நிறைய லாபம் வரும் என்றும் கூறுகிறார் அவர் மனைவி. இதனால் தள்ளாத வயதில் வீட்டை விட்டு ஓடி போகிறார் டால்ஸ்டாய். படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் மனைவி பணத்தாசை கொண்டிருந்தாலும் டால்ஸ்டாய் மேல் கடைசி வரை மிகுந்த அன்பு கொண்டவராய் வாழ்த்திருக்கிறார். நண்பர்கள் இந்த படத்தையும், அதற்கு முன் இந்த புத்தகத்தையும் படித்துவிடுமாறு கேட்டுகொள்கிறேன். ஒரு நல்ல மனிதனை பற்றிய பதிவு போட்டதில் எனக்கு திருப்தி. இவரை பற்றிய வேறு ஏதேனும் செய்தி இருந்தால் நண்பர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

Tuesday, April 3, 2012

Secrets Of Stanley Kubrick

சென்ற வாரமே எழுதி இருக்க வேண்டிய பதிவு. அதற்குள் Game of Thrones Tv series பார்க்க துவங்கி விட்டேன். அட்டகாசமான சீரீஸ். இரண்டே நாட்களில் பத்து எபிசோடுகளையும் தூக்கம் குறைத்து பார்த்தேன். நண்பர்கள் தவறாமல் இதை பார்க்கவும். இதை பற்றி நம் கருந்தேள் எழுதிய பதிவு இங்கே.

நான் சென்ற பதிவில் சொன்னது போல் குப்ரிக் பற்றிய ஒரு விஷயத்தை தான் இங்கு பார்க்க போகிறோம். நம்ம கொழந்த கணேசிடம் இதை பற்றி சொன்னதற்கு "அது எனக்கு எப்போவே தெரியுமே" என்று கூலாக கூறிவிட்டார். ஆக அவரை போன்ற Prodigy, இது பழைய மேட்டர்பா என்று என்னை திட்ட வேண்டாம்.

இதில் நான் சொல்லும் தகவல்கள் எல்லாம் சமீபத்தில் நான் பார்த்த ஒரு ஆவணப்படம் கூறியது. 1969ல் Apollo 11 என்ற விண்கலம் நாசாவால் நிலவிற்கு மனிதனை சுமந்து சென்றது நாம் அறிந்ததே. விண்கலம் நிலவிற்கு சென்றதே தவிர அதில் மனிதர்கள் இறங்கினர் என்பது அமெரிக்கா நடத்திய நாடகம் என்று இன்று வரை பலர் எதிர்ப்பதும் நமக்கு தெரியும். அவர்கள் நாசா வெளியிட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளி எல்லாமே ஜோடிகப்பட்டது என்று வாதாடுகின்றனர்.

சரி. அமெரிக்கா நிலவிற்கு மனிதனை அனுபவில்லை என்றே வைத்து கொள்வோம். அப்படியென்றால் நாசா வெளியிட்ட அந்த வீடியோ? அதில் தெரிந்த விண்வெளி? ஆர்ம்ஸ்ட்ராங் குதித்து விளையாடிய நிலவு? ஒரு செட் போட்டு தானே எடுத்திருக்க வேண்டும். அப்படி உலகையே நம்பவைக்கும் அளவிற்கு தத்ரூபமாக செயற்கை விண்வெளியை உருவாக்கி படம் பிடித்த அந்த ஜீனியஸ் யார்? ஸ்டான்லி குப்ரிக்.

ஏன் குப்ரிக்?

1959 ல் நிலவிற்கு முதல் முதலாக விண்கலம் அனுப்பி சாதனை படைத்தது சோவியத். சோவியத் உடனான பனிப்போர் காரணமாக தன் வலிமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் திணறிக்கொண்டிருந்தது அமெரிக்கா. அப்போதுதான் குப்ரிக்கின் Dr. Strange Love திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றது. அந்த படத்தின் காட்சி அமைப்பு, முக்கியமாக போர் விமானங்கள் பறக்கும் காட்சிகள் அனைத்தும் செயற்கை என்று தெரியாத அளவிற்கு இருக்கும். இந்த படம் தான் Moon Landing Video வை இயக்க குப்ரிக் தான் சரியான ஆள் என்று அமெரிக்காவை நினைக்க வைத்தது. குப்ரிச்கை அணுகி சம்மதம் பெற்றது அரசு. அதற்கான வேலைகளில் இறங்கினார் குப்ரிக். இதற்கிடையில் 2001 A space odyssey படத்தின் வேலைகளையும் துவக்கினார். நான்கு வருட உழைப்பிற்கு பிறகு Space odyssey படம் 1968 ல் வெளியானது. Moon Landing video 1969 ல் வெளியானது. இந்த இரண்டு படங்களும் ஒரே நபரின் கை வண்ணம் கொண்டவையாக இருக்கிறது. கீழே கொடுக்கபட்ட படங்களை பார்த்தால் புரியும்.


கோட்டிற்கு முன்னால் இருபது வரை செட். கோட்டிற்கு பின்னால் இருப்பது விண்வெளி போல் தெரியும் திரை. இதை எப்படி எடுத்தார்கள் என்றால்.



இது Space Odyssey படத்தின் முதல் காட்சியில் வரும் ஆப்ரிக்க கண்டம் என்றால் நம்ப முடிகிறதா.


இப்போது நாசா வெளியிட்ட புகைப்படங்களை பாப்போம்.



இந்த புகைப்படங்களை பார்த்தால் ஒரே மாதிரியான் செட் போட்டு இருப்பதை காண முடியும். மேலும் நாசாவின் விஞ்ஞானிகளான Frederick Ordway மற்றும் Harry Lange, Space Odyssey படத்திற்கு ஆலோசகர்களாக பணிபுரிந்துள்ளனர். இது குப்ரிக் பற்றிய இந்த சந்தேகத்தை ஊர்ஜிதபடுத்துவதாக உள்ளது.

குப்ரிக் சொல்லாமல் சொல்லிய ரகசியம்:

1980ல் வெளியான தனது The Shining படத்தின் மூலம் நிலவில் மனிதன் தரை இறங்க வில்லை என்கிற உண்மையை குப்ரிக் மறைமுக மாக கூறியிருக்கிறார். இது The Shining படத்தில் வரும் ஒரு காட்சி.


இதில் அந்த சிறுவனின் சட்டையை கவனியுங்கள். Apollo 11 என்று எழுதி இருக்கிறது. படம் பார்த்தவர்களுக்கு இந்த காட்சி தெரியும். அந்த சிறுவன் நடந்து சென்று ஒரு அறைக்குள் நுழைவான். அந்த அறையில் உள்ளது எதுவும் உண்மை இல்லை, எல்லாம் ஒரு பொய்யான தோற்றம் என்று காட்சி விரியும். சிறுவன் நுழையும் அந்த அறையின் எண் 237. இந்த படம் ஒரு நாவலின் தழுவல். அந்த நாவலில் அறையின் எண் 218 என்று இருக்கும். இதை குப்ரிக் ஏன் 237 என்று மாற்ற வேண்டும்.


அந்த அறைதான் நிலவு என்றும், நிலவிற்கும் பூமிக்கும் இருக்கும் இடைவெளி 237000 மைல்கள் என்பதை குறிகின்றாரா. அதாவது சிறுவன் என்கிற அபோல்லோ விண்கலம், அறை என்கிற இல்லாத நிலவிற்குள் நுழைந்தது என்கிறார். இவையெல்லாம் குப்ரிக் கவனிக்காமல் நடந்த சம்பவமாக நம்மால் எடுத்து கொள்ள முடியாது. ஒரு காட்சியில், கதாபாத்திரம் என்ன உடை அணிய வேண்டும் என்பது வரை இயக்குனர் தான் முடிவு செய்வார். அதுவும் குப்ரிக் படங்களில் ஒவ்வொரு அசைவிற்கும் ஒரு உள் அர்த்தம் இருக்கும். எனவே இந்த காட்சி ஒரு உண்மையை வெளிபடுத்தும் பொருட்டே அவர் இப்படி செய்திருக்கிறார். கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம். Moon Landing வீடியோவை இயக்கியவர் Kubrick என்ற குற்றச்சாட்டு இந்த படத்தை இயக்கும் முன்பே அவர் மேல் இருந்தது. இருந்தும் இப்படி ஒரு Controversial காட்சியை அவர் வைக்க காரணம்?

இவை தான் நான் பார்த்த Kubrick's Odyssey - Secrets Hidden in the Films of Stanley Kubrick என்ற ஆவன படத்தில் கூறியது. இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கும் நண்பர்கள் இந்த படத்தை பார்க்கவும். இதை எல்லாம் உண்மை என்றோ பொய் என்றோ நான் கூற விரும்பவில்லை. இப்படி ஒரு தகவல் இருக்கிறதென்று எனக்கும் போன மாதம் வரை தெரியாது. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தான் இந்த பதிவு. மேலும் அமெரிக்காவிற்கு எதிராக யார் என்ன சொன்னாலும் அதை நம்பவே என் மனம் விளைகிறது. ஏனெனில் இன்று மதியம் நான் படித்து முடித்த Marlon Brando சுயசரிதம் வரை பல புத்தகங்களில் அமெரிக்கர்களே அமெரிக்கா இதுவரை நடத்திய கொடுமைகளை விளக்கி கூறி உள்ளனர். அதனால் தான் இந்த நிலைப்பாடு. நண்பர்கள் இதன் தொடர்பாக உங்கள் கருத்தை தெரிவிக்கவும்.

Saturday, March 24, 2012

Spartacus - அடிமைகளின் பிரதிநிதி

“You don’t have to be a nice person to be extremely talented. You can be a shit and be talented, and, conversely, you can be the nicest guy in the world and not have any talent. Stanley Kubrick is a talented shit.”

தலைவரை இப்படி அசிங்கபடுதியது யார் என்று பின்னால் பார்போம்.

நீண்ட நாட்களாகவே இந்த படத்தை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்துகொண்டிருந்தேன். சில மாதங்களுக்கு முன் புத்தக கடை வைத்திருக்கும் நண்பர் ஒருவர் தான் ஸ்பார்டகஸ் நாவலை அறிமுகபடுத்தினார். கடந்த 60 ஆண்டுகளில் உலகின் 100 மொழிகளுக்கும் மேல் மொழி மாற்றம் செய்யப்பட்டு பல லட்சம் பிரதிகள் விற்று சாதனை படைத்துள்ளது. இந்த நாவலை தான் குப்ரிக் படமாக எடுத்திருக்கிறார். நாவல் படித்துவிட்டு படத்தையும் பார்த்து விடுவோம் என்று நினைத்தேன். ஆனால் தமிழில் ஒரு வெங்காயம் அந்த நாவலை படு மொக்கையாக மொழிபெயர்த்து படிக்கவிடாமல் கடுபேற்றிவிட்டார்.

உலகின் மிகபெரிய ஏகாதிபத்திய பகுதியாக விளங்கிய ரோம பேரரசின் அடித்தளத்தை கொஞ்சம் அசைத்து பார்த்த ஸ்பார்டகஸ் பற்றிய கதை. கார்ல் மார்க்ஸ் இவரை "பண்டையகால வரலாற்றில் பாட்டாளி வர்கதிற்காக பாடுபட்ட மிகச்சிறந்த வீரன்" என்று வர்ணிக்கிறார். அடிமைகளுள் ஒருவனாக வாழும் ஸ்பார்டகஸ், தன் நண்பன் ஒருவன் கொல்லப்பட்டதும் கோபம் கொண்டு எழுபது அடிமைகளுடன் தப்பிக்கிறான். பின் ரோமாபுரத்தில் வாழும் பல அடிமைகளை விடுவித்து அவர்களோடு சேர்ந்து வலிமையான ரோம பேரரசிற்கு எதிராக போராடுகிறான். அவன் வெற்றி பெற்றானா, அடிமைகள் சுதந்திரம் பெற்றார்களா என்பது வரலாறு.



படம் உருவான பின்னணி:

படத்தின் ஸ்பார்டகஸ் ஆக நடித்திருப்பது Kirk Douglas. இவர்தான் குப்ரிக்கை மேல குறிப்பிட்டவாறு திட்டியது.1951 ல் Howard Fast எழுதிய Spartacus நாவலை தயாரித்து நடிக்க முடிவு செய்தார் Kirk Douglas. முதலில் Antony Mann என்பவரை இயக்குனராக போட்டு படத்தின் சில காட்சிகளை எடுத்த டக்ளசுக்கு அது பிடிக்காமல் போகவே Mann னை மாற்றி விட்டு குப்ரிக்கை இயக்குனராக அமர்த்தினார். அதுவும் 24 மணிநேரத்திற்குள் வேலைக்கு சேரவேண்டும் என்ற நிபந்தனையுடன். ஏற்கனவே Paths of Glory படத்தில் குப்ரிக் இயக்கத்தில் நடித்த டக்லஸ் அவருடன் கடும் மோதலில் இருந்தார். படத்தின் ஸ்க்ரிப்டை தன்னை கேட்காமல் மாற்றியதற்காக குப்ரிக்கை மோசமான வார்த்தைகளால் திட்டியதாக அவரே குறிப்பிட்டிருக்கிறார். அப்போது குப்ரிக் வளரும் இயக்குனர் என்பதால் அவரால் எதிர்த்து எதுவும் பேசி இருக்க முடியாது. இருந்தும் ஸ்பார்டகஸ் படத்தை இயக்கும் திறன் அன்று குப்ரிக்கை விட்டால் யாருக்கும் கிடையாது என்று டக்லஸ் தெரிந்து வைத்திருந்தார். ஸ்கிரிப்ட்ல கைய வெச்ச மொத டெட்பாடி நீதாண்டா என்று சொன்ன பிறகே படத்தை இயக்கவிட்டிருக்கிறார் போல. தனது படங்களை பற்றி பின்னாளில் பேசிய குப்ரிக் "எனது கன்ட்ரோலில் இல்லாத ஒரே திரைப்படம் ஸ்பார்டகஸ் தான். அந்த படம் இன்னும் நன்றாக வந்திருக்க வேண்டும். ஆனால் திரைகதையை மாற்ற டக்லஸ் என்னை அனுமதிக்கவில்லை" என்று புலம்பினார்.



[ என்னா கெத்து :) ]


இவருடன் மட்டும் அல்ல. படத்தின் ஒளிபதிவாளர் ரஸ்ஸல் உடனும் குப்ரிக் மோதலில் ஈடுபட்டுள்ளார். படத்தின் ஷாட்களை இவர்தான் நிர்ணயிப்பார். இந்த படம் இயக்கும் போது குப்ரிக் பார்பதற்கு சின்ன பையன் போல இருப்பார். ஆனால் வயது 30. ஒரு பொடியன் யார் என் ஷாட்களை தீர்மானிக்க என்று ரஸ்ஸல் கொதித்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் படத்தில் இருந்து விலகி கொள்வதாக ரஸ்ஸல் அறிவிக்க பல சமாதானங்களுக்கு பின் மீண்டும் ஒளிபதிவு செய்ய வந்தார். ஆனால் இவையெல்லாம் குப்ரிக்கை மாற்றவில்லை. Photography, Lens, Lighting என்று எல்லாவற்றிலும் மேதாவியாக விளங்கிய குப்ரிக் எதற்காகவும் விட்டு கொடுக்க மாட்டார். இது அவர் குணம். தனது கடைசி படம் வரை ஒளிப்பதிவு அவர் சொல்லும்படி, இல்லை கட்டளை இட்டபடி தான் இருந்தது. கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், இந்த படத்திற்காக ரஸ்ஸல் ஆஸ்கார் விருது பெற்றார். குப்ரிக் தயவால்.

Kirk Douglas - நிஜத்திலும் போராளி:

நிஜ வாழ்விலும் மக்களுக்காக போராடும் ஸ்பார்டகஸ் தான் Kirk Douglas. இந்த படத்தின் திரைக்கதை எழுதியவர் Trumbo. இவர் ஹாலிவுட் Black list ல் இடம் பெற்றவர். அதாவது கம்யூனிச சிந்தனை உள்ளவர்கள் Black List இல் சேர்க்கப்பட்டு ஹாலிவுட்ல் பணிபுரிய விடாமல் தடுக்கப்பட்டனர்.



அப்படி இவர்கள் ஏதேனும் ஒரு படத்தில் ரகசியமாக பணி புரிந்தாலும், இவர்களின் பெயர் படத்தில் குறிப்பிடபடாது. பல ஆண்டுகளாக நிலவி வந்த இந்த அநீதியை ஸ்பார்டகஸ் படத்தில் Trumbo வின் பெயரை தைரியமாக வெளியிட்டு Black List க்கு முடிவு கட்டினார் Douglas. இதற்காக 1988 ஆம் ஆண்டு, American Civil Liberties Union இவருக்கு மரியாதை செலுத்தி கௌரவித்தது. மேலும் தன் வாழ்வில் இருபது நாடுகளுக்கு மேல் பயணித்து மாணவர்களிடமும், பொதுமக்களிடமும் ஜனநாயகத்தின் அவசியத்தை பற்றி பேசி உள்ளார். அமைதிக்கான ஜனாதிபதி விருதும் இவருக்கு அளிக்கபட்டிருக்கிறது. Denzel Washington போல் இருக்கும் இவரது கம்பீரமான உடல் மொழி எனக்கும் மிகவும் பிடிக்கும்.

ஐம்பது வருடங்களுக்கு முன்பு எடுக்க பட்ட இந்த படத்தின் பிரம்மாண்டம் மலைக்கவைக்கிறது. கிராபிக்ஸ் இல்லாமலே ரோம சாம்ராஜியத்தை எப்படி குப்ரிக் உருவாக்கினார் என்று தெரியவில்லை. போர் காட்சிகளில் பத்தாயிரம் பேருக்கு மேல் பயன்படுத்தியிருகிறார். கலப்படமற்ற பிரம்மாண்டம் அது. தொப்பையில், ரயிலில் படம் வரைவதை மட்டுமே பிரமாண்டமாக கருதிகொண்டிருபது நாம் பெற்ற சாபம். போர்கள காட்சிகள் அந்த முப்பது வயது இளைஞனின் ஆளுமையை காட்டுகிறது. படத்தின் அந்த இறுதி காட்சி Classic. இந்த படத்தை பார்காத நண்பர்கள் கண்டிப்பாக பாருங்கள். எவ்வளவு மட்டமான ரசனை கொண்டவனாக இருந்தாலும் படத்தின் ஏதோ ஒரு காட்சி அவனை கவர்ந்து விடும் என்பது உண்மை. ஸ்டான்லி குப்ரிக்கை பற்றி ஒரு புதிய விசயத்தை போன வாரம் தெரிந்து கொண்டேன். சுவாரஸ்யமாக இருந்தது. அதை பற்றி வரும் பதிவில் பார்போம்.

Wednesday, February 22, 2012

Anonymous - ஷேக்ஸ்பியர் ஒரு நயவஞ்சகன்?

புகழ் பெற்ற நாடக ஆசிரியர்களுள் முதன்மையானவர். உலகில் இதுவரை அதிகம் மேடையேற்றப்பட்ட நாடகங்கள் இவருடையது. காலத்தால் அழியாத எழுத்துக்களுக்கு சொந்தமானவர். இப்படி பல பில்ட் அப்கள் தகும் ஷேக்ஸ்பியருக்கு. ஆனால் இன்று எல்லோரும் கொண்டாடும் அந்த படைப்புகள் எதுவுமே ஷேக்ஸ்பியருக்கு சொந்தமானதல்ல என்கிறது Anonymous. அதுமட்டுமல்ல ஷேக்ஸ்பியர் ஒரு கிறுக்கன், குடிகாரன், கொலைகாரன் என்று காட்டியுள்ளது யாரென்றால் Independence Day முதல் 2012 படங்கள் வரை எடுத்து நமக்கெல்லாம் பரிட்சயமான Roland Emmerich தான்.


நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சர்சை இருந்து வருகிறது. முக்கியமான Conspiracy Theory களுள் இதுவும் ஒன்று. ஒரு கையுறை தயாரிப்பாளரின் மகனான ஷேக்ஸ்பியர் அடிப்படை இலக்கண வகுப்பை மட்டுமே முடித்தவர். மேலும் அவரது படைப்புகளில் வரும் நிகழ்வுகளை விவரிக்கும் அளவிற்கு அவர் உலக அனுபவம் பெற்றதில்லை என்கின்றனர் சிலர். ஒருவர் இரண்டு பேர் இல்லை. 300 க்கும் மேற்பட்டோர் இதுவரை ஷேக்ஸ்பியருக்கு எதிராக பேசிவந்துள்ளனர். நம்ம ஊர் ராமதாஸ் யாரயாவது வம்பிழுத்து பேமஸ் ஆக முயற்சிப்பது போல் அங்க யாரவது பண்ணி இருப்பாங்கனு நினைத்தேன். ஆனால் Charles Dickens, Mark Twain போன்ற மிக பிரபலமான எழுத்தாளர்களும் ஷேக்ஸ்பியரை நம்பவில்லை. பலர் தங்கள் வாழ்வையே இது உண்மை என்று நிரூபிக்க அற்பணித்துள்ளனர்.

இரண்டு நாளுக்கு முன்பு நாளிதழில் Dr.Gilbert Slater என்ற பொருளார அறிஞரை பற்றி படித்தேன். பிரிட்டனில் பிறந்து இல் இந்தியா வந்து மதராஸ் பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்தவர். இவரின் Seven Shakesphere என்ற நூல் பிரபலம் என்று கூறபடுகிறது. ஷேக்ஸ்பியர் பற்றிய ஆராய்ச்சியின் முடிவாக எழுதிய அந்த நூலில் இவர் கூறுவது ஷேக்ஸ்பியர் படைப்புகள் யாவும் ஏழு பேர்களால் வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டது என்பதே. இவ்வாறு பல விவாதங்கள் அவருக்கு எதிராக முன்வைக்கபடுகிறது.

அப்படி என்றால் அந்த படைப்புகளுக்கு உரிமையாளர் யார்? 17ஆம் Earl of Oxford ஆன Edward de Vere என்பவர் தான் அதை உண்மையில் எழுதினார் என்கின்றனர். இவர் யார் என்பதே படத்தின் மைய கரு.

சரி கதைக்கு வருவோம். லண்டனில் பதினாறாம் நூற்றாண்டில் எலிசபெத் மகராணிக்கு பின் யார் அரியணையில் அமர்வது என்று பெரும் போட்டி நடக்கிறது. Cucil என்பவர் சூழ்ச்சி செய்து James என்பவரை இளவரசராக முயற்சிக்கிறார். ஆனால் எலிசபெத் மகன் Oxford(ஷேக்ஸ்பியர் நாடகங்களுக்கு உண்மையான உரிமையாளர்) Earl Of Essex என்பவரை அரியணையில் அமர்த்த முடிவெடுக்கிறார். Cecil மற்றும் James இன் புகழை குறைத்து அரியணையில் Essex சை அமரவைக்க, தான் எழுதிய நாடகங்களை ஜான்சன் என்பவரிடம் கொடுத்து அவர் மூலம் மேடையேற்ற முயற்சிக்கிறார் Oxford. இதை ஏன் Oxford தானே செய்யவில்லை என்றால் நாடகங்கள் எழுதுவது பாவமாக கருதப்படும் நிலை அப்போது. மேலும் ஆக்ஸ்போர்ட் செய்த ஒரு கொலையை மூடி மறைக்க அவருடைய மாமனார் அவர் நாடகங்கள் எழுத கூடாது என்று ஆணையிடுகிறார். ஜான்சன் நாடகத்தை அரங்கேற்றும் நேரத்தில் ஷேக்ஸ்பியர் நுழைந்து அது தன்னுடையது என்று அறிவித்துக்கொள்கிறார். சிக்கலான முடிச்சு போல் இருக்கும் கதையில் இது ஒரு சிறிய பகுதி மட்டுமே. மீதியை படத்தில் பார்த்து கொள்ளுங்கள்.


Oxford அரச வம்சத்தில் வளர்வதால் அவருக்கு சிறிய வயது முதலே பல்துறை சார்ந்த அறிவு ஊட்டபடுகிறது. இளவயது முதலே அவர் கதைகள் எழுதுவதில் கைதேர்தவராக இருக்கிறார் என்று காட்டுகிறார்கள். பல நாடுகளுக்கு கப்பலில் பயணங்கள் மேற்கொள்கிறார். அதாவது Oxford தான் அந்த நாடகங்களை எல்லாம் எழுதி இருப்பார் என்பதற்கு இவை சிறிய சாட்சியங்கள். மேலும் Oxford தன் இளவயதில் ஒரு வேலைக்காரனை கொன்றுவிடுகிறார். இதே போல் ஒரு காட்சி ஷேக்ஸ்பியரின் Hamlet நாடகத்தில் வருகிறது.

படத்தில் ஷேக்ஸ்பியரை பற்றிய பிம்பத்தை இவ்வளவு கீழ்த்தனமாக காட்டவேண்டுமா என்று தோன்றுகிறது. ஒரு ஆகச்சிறந்த கவிஞரை நிரூபிக்க படாத காரணங்களை காட்டி கொலைகாரன் என்று சித்தரிப்பது எதற்கு? ஒருவேளை Davince Code போல சர்ச்சையான விசயத்தை எடுத்து படமாக்கினால் வசூல் கொட்டும் என்று இயக்குனர் நினைத்திருப்பாரோ.

படம் சொல்லிகொள்ளும்படி பிரமாதமாக இல்லை என்றாலும் ஒரு சில காட்சிகள் எனக்கு பிடித்திருந்தன. அதில் ஒன்று ஷேக்ஸ்பியரை மக்கள் தங்கள் கைகளில் ஏந்தி கொண்டாடும் போது நாடகத்தை எழுதிய Oxford அதே அரங்கில் அமர்ந்து அதை பார்த்து கண்ணீர் வடிப்பார். உண்மையிலேயே Oxford தான் உரிமையாளர் என்றால் அவரது மனம் எவ்வாறு கலங்கியிருக்கும் என்று காட்டியிருப்பார்கள்.